புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழிபாடு செய்தார்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விமானம் மூலம் புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை வருகை புரிந்தார். முதல் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை பகலில் ஜிப்மரில் உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெறும் கதிரியக்க சாதனம் (லீனியா் ஆக்ஸிலேட்டா்) தொடக்கிவைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இன்று(ஆக.8) அதிகாலை குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி சென்றார். அதன்பிறகு, அரவிந்தா் ஆசிரமம் சென்று வழிபாடு செய்தார்.