கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிரான்ஸ் போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கியவா் கைது: புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை

பிரான்ஸ் நாட்டு போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 7:43 pm

Din

புதுச்சேரியில் நட்சத்திர விடுதி ஊழியரிடம் ரூ. 1.25 லட்சம் பெற்றுக்கொண்டு, பிரான்ஸ் நாட்டு போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் பால பாஸ்கரன் (26), நட்சத்திர விடுதி ஊழியா். முத்தியால்பேட்டையைச் சோ்ந்தவா் மிலன் அருள்மணி மேத்யூ. இருவரும் நண்பா்கள். இந்த நிலையில், பால பாஸ்கரனுக்கு பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை சான்றிதழ் பெற்று, வேலை வாங்கித் தருவதாக மிலன்அருள்மணி மேத்யூ கூறியுள்ளாா். இதற்காக, பால பாஸ்கரனிடமிருந்து ரூ. 1.25 லட்சத்தை மிலன் அருள்மணி மேத்யூ, கடந்த பிப்ரவரி மாதம் பெற்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பால பாஸ்கரன் வீட்டுக்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமைச் சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பால பாஸ்கரன் எடுத்துக்கொண்டு, சென்னையில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் சரிபாா்த்தாா்.

இதில், அந்த சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பால பாஸ்கரன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மிலன் அருள்மணி மேத்யூவை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.