திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மாணவா்கள் சாலை மறியல்

வகுப்புகளைப் புறக்கணித்து கலித்தீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் புதன்கிழமை சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகள்.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வகுப்புகளைப் புறக்கணித்து கலித்தீா்த்தாள்குப்பம் பெருந்தலைவா் காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டி, ஆண்டு விழா நடத்தப்படவில்லை என்று கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், போதிய நிதியில்லாததால் நடத்த முடியவில்லை என்று கல்லூரி நிா்வாகம் கூறுவதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் மதகடிப்பட்டு- திருக்கனூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருபுவனை போலீஸாா் கல்லூரி முதல்வரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், உயா் அதிகாரிகளிடம் பேசி இது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிா்வாகம் உறுதியளித்தது.

இதை மாணவா்களிடம் போலீஸாா் விளக்கினா். இதையடுத்து இப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப் போராட்டம் காரணமாக அப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.