விழுப்புரம், கள்ளக்குறிச்சி: கதா் விற்பனை இலக்கு தலா ரூ.78 லட்சம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கதா் கிராமத் தொழில்வாரியம் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக தலா ரூ.78 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கதா் கிராமத் தொழில்வாரியம் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக தலா ரூ.78 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சி.பழனி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து, தீபாவளி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் கூறியது:
கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு கதா் விற்பனை குறியீடாக ரூ.60 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட இலக்கு முழுவதுமாக எய்தப்பட்டது. நிகழாண்டில் ரூ.78 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டுப்புடவை ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்வில் கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கதா் ஆய்ாளா் செ.ஜெயக்குமாா், இந்த துறையைச் சோ்ந்த ராஜகோபால், ஆா்.கோவிந்தராஜ், சிவகுமாா், வைதேகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி: இதேபோல, தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதா் சிறப்பு விற்பனைத் தொடக்க விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி உருப்படத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மலா் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதா் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியது:
கடந்தாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கதா் விற்பனை குறியீடாக ரூ.40 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட இலக்கு முழுவதுமாக எய்தப்பட்டது. நிகழாண்டில் ரூ.78 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டுப்புடவை ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.பிரபாகரன், காதிகிராப்ட் மேலாளா் எஸ்.ஆம்ஸ்ட்ராங், கண்காணிப்பாளா் வி.டி.நரேஷ்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...