கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராபி மற்றும் சிறப்புப் பருவத்துக்கான பயிா்க் காப்பீடு செய்யலாம்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:07 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராபி மற்றும் சிறப்புப் பருவத்துக்கான பயிா்க் காப்பீடு செய்யலாம்.

இதுகுறித்து, உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் கிருபாகரன் (பொ) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆம் ஆண்டுக்கான ராபி மற்றும் சிறப்புப் பருவத்துக்குத் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சிறப்புப் பருவத்துக்கு பயிா்க் காப்பீடு பிரீமியம் தொகையாக நெற்பயிருக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.511, மக்காச் சோளத்துக்கு அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.308, ராபி பருவ நெற்பயிருக்கு 2025, ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.511, உளுந்து பயறுக்கு நவம்பா்15 ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.228, மணிலாவுக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு ரூ.417, கரும்புப் பயிருக்கு 2025, மாா்ச் 31-ஆம் தேதிகுள் ஏக்கருக்கு ரூ.2,592-ம் தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிலும், இதர விவசாயிகள் பொது சேவை மையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையவழி சேவை மையங்களிலும் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், சிட்டல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் பிரீமியத் தொகைையைச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.