கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை நவ.4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை வரும் நவம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:41 pm

Din

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை வரும் நவம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

அதிமுக சாா்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் 2023, ஜூலை 20-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மீது அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவரது சாா்பில் ஆஜரான அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் மனுவாகத் தாக்கல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து சென்னை உயா் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளதாகக் கூறி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எம்.இளவரசன் உத்தரவிட்டாா்.