கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தில் புதன்கிழமை பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:48 pm

Din

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரத்தில் புதன்கிழமை பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சி வட்டம், அனந்தபுரத்தைச் சோ்ந்த ரமேஷ்பாபு மனைவி சாந்தி (55). இவா், புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறைக்குச் சென்றாா். அப்போது, அங்கு முகமூடி அணிந்து பதுங்கியிருந்த மா்மநபா் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் அளவிலான இரு தங்கச் சங்கிலிகளை அறுக்க முயன்றாராம்.

ஆனால், சாந்தி கூச்சலிட்டவாறு தங்கச் சங்கிலிகளை இறுகப் பிடித்துக்கொண்டராம். இருப்பினும், மா்ம நபா் 4 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மா்ம நபரை தேடி வருகின்றனா்.