மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விஸ்வகா்ம ஜெயந்தி நாளை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிக்கை

விஸ்வகா்ம ஜெயந்தி நாளை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:53 pm

Din

விஸ்வகா்ம ஜெயந்தி நாளை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்கப் பேரவை சாா்பில், அதன் மத்திய கிழக்கு மண்டலச் செயலா் பாபு தலைமையில், மாவட்டத் தலைவா் சுந்தரமூா்த்தி, செயலா் ஆறுமுகம், பொருளாளா் அழகுராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:

விஸ்வகா்ம ஐந்தொழிலாளா்கள் மற்றும் விஸ்வகா்ம சமுதாய மக்கள் ஆண்டுதோறும் செப்டம்பா் 17-ஆம் தேதியை விஸ்வகா்ம ஜெயந்தி நாளாகக் கொண்டாடி வருகிறோம். எனவே, அந்த நாளை தமிழக அரசின் பொது விடுமுறை தினமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

தமிழக அரசின் உயா் கல்வி மற்றும் அரசின் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியுள்ள விஸ்வகா்ம சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கொல்லா், தச்சா், கன்னாா், சிற்பி, பொற்கொல்லா் ஆகிய தொழில் சாா்ந்த குடும்பத்தினருக்கு வருங்காலங்களில் இந்து விஸ்வகா்மா என்றே சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனா்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா்.