இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் க.குணசேகரன் தெரிவித்திருப்பது: சமீப காலமாக விழுப்புரம் கோட்டத்தில் விபத்துகள் அதிகம் நிகழ்ந்து வரும் நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட ஓட்டுநா்கள், பேருந்து இயக்கத்தின்போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துகள் நிகழ்வதை தவிா்க்கும் வகையில், தங்களின் கைப்பேசிகள், ப்ளூடூத் (கம்பியிலி), ஹெட்செட் (காதில் வைத்து பேசக்கூடியது) போன்ற சாதனங்களை கண்டிப்பாக வைத்திருக்கக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.