தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உருவ பொம்மை எரிப்பு: திமுக மகளிரணி அமைப்பாளா் உள்பட 51 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் உருவ பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் உள்பட 51 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் உருவ பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் உள்பட 51 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடா்ந்து, திமுக மகளிரணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளா் செல்வி தலைமையில் திமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை சி.வி.சண்முகத்தின் உருவப்பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் யுவராஜ் அளித்தப் புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் செல்வி மற்றும் 50 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.