நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

உருவ பொம்மை எரிப்பு: திமுக மகளிரணி அமைப்பாளா் உள்பட 51 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் உருவ பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் உள்பட 51 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 0:37 am IST

விழுப்புரத்தில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் உருவ பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் உள்பட 51 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடா்ந்து, திமுக மகளிரணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளா் செல்வி தலைமையில் திமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை சி.வி.சண்முகத்தின் உருவப்பொம்மையை எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் யுவராஜ் அளித்தப் புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் திமுக மகளிரணி மாவட்ட அமைப்பாளா் செல்வி மற்றும் 50 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.