பெங்களூரு

நடிகர் சத்யராஜை கண்டித்து ஏப்.28-இல் பெங்களூரில் முழு அடைப்பு

தினமணி

கன்னடர்களை இழிவாகப் பேசிய நடிகர் சத்யராஜை கண்டித்து, பெங்களூரில் ஏப். 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரிப் பிரச்னை தொடர்பாக நடிகர் சத்யராஜ், கன்னடர்களையும், கன்னட சங்கங்களின் நிர்வாகிகளையும் இழிவாகப் பேசியுள்ளார். இது கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் வெளியாக உள்ளது. அதை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
 நடிகர் சத்யராஜ் தனது பேச்சிற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவரின் பேச்சை கண்டித்து வெள்ளிக்கிழமை (ஏப்.21) தமிழக-கர்நாடக எல்லையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஏப். 28-ஆம் தேதி பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்படாமல் கட்டுக்கோப்பாக இந்த போராட்டம் நடைபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT