தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நகரமாக பெங்களூரு திகழ்கிறது என்று டேப்லஸ் குழும மேலாண் இயக்குநர் அதீப் அகமது கூறினார்.
பெங்களூரில் டேப்லஸ் குழுமத்தின் விற்பனை மையத்தை அவர் திங்கள்கிழமை தொடக்கி வைத்து பேசியது:-
உலக அளவில் 82 நாடுகளில் விற்பனை மையங்களைத் தொடங்கியுள்ளோம். இந்தியாவில் பெங்களூரில் முதல் விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளோம். இதைத் தொடர்ந்து, மும்பை, சென்னையில் விற்பனை மையங்களைத் தொடங்க உள்ளோம்.
உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நகரமாக பெங்களூரு திகழ்கிறது. தொழில் முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் பெருகி வருகிறது. புதிதாக முதலீடு செய்பவர்களை மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்து ஊக்குவித்து வருகின்றன. இதனால் பெங்களூரில் தொழில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், விற்பனை மையங்களை தொடங்கவும் ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.