கடனுக்கு கூடுதல் வட்டி வசூலித்ததாக பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெங்கேரி கோடிபாளையாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஷீலா(31). இவர்அப் பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு கடன் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடனுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதாக கெங்கேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஷீலா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து நிரப்பப்படாத காசோலை, ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.