பெங்களூரு

லாரி மீது பயணிகள் வேன் மோதல்: 3 பேர் பலி

DIN

மைசூரு அருகே லாரி மீது பயணிகள் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
தென்கன்னட மாவட்டம், மங்களூரு தொக்கொட்டியைச் சேர்ந்தவர் ஹமீது (45). இவரது மகன் ஷேக் ஹக்கீப் (11). உறவினர் முகமது இக்பால் (43) உள்பட 17 பேர் திங்கள்கிழமை இரவு பயணிகள் வேனில் உதகைக்கு சுற்றுலாச் சென்று கொண்டிருந்தனராம்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் மைசூரு மாவட்டம், ஹுன்சூர் கலகட்டி அருகே எதிரே சென்ற லாரி மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹமீது, ஷேக் ஹக்கீப், முகமது இக்பால் ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதுகுறித்து பிலிகெரே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT