பெங்களூரு

பெங்களூரில் அக்.8-இல் திருமணமேடை நேர்காணல்

தினமணி

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில், பெங்களூரில் அக்.8-ஆம் தேதி திருமணமேடை நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 இதுகுறித்து திருமணமேடை பொறுப்பாளர் அமுதபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
 பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் மணமக்கள் பொருத்தம் பார்ப்பதற்காக 2002-இல் திருமணமேடை பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவின் சார்பில் 6 வாரங்களுக்கு ஒருமுறை மணமக்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் பரஸ்பரம் தங்கள் இணையரைத் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது.
 இப்பிரிவில் தமிழினத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியை சார்ந்தவர்களும் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். பலர் கலப்புத் திருமணமும் செய்து வருகின்றனர். இதுதவிர, கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவினர், தெலுங்கு நாயுடு வகுப்பினரும், கைம்பெண்களும், மனைவியைப் பிரிந்த ஆண்களும், மணமுறிவு பெற்றவர்களும் திருமணமேடை பிரிவில் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனர்.
 பெங்களூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கர்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், மும்பை, தில்லி, மற்றும் வெளிநாடுகளில் பணி புரிவோரும் திருமண மேடையில் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்கள் திருமண மேடை வழியாக நடைபெற்றுள்ளன. அடுத்ததாக 126-ஆவது திருமண மேடை நேர்காணல் அக்.8-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. அப்போது, மணமக்கள் மேடையில் அறிமுகம் செய்யப்படுவர். அக்.8-ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்பவர்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
 இரண்டு கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம், அஞ்சலட்டை அளவு புகைப்படம் ஒன்று, கல்வித்தகுதி, ஜாதகம்,ஜாதி சான்றுகள் கொண்டுவர வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.ஆயிரம் செலுத்த வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 080-25510062, 25551357 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT