ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம், கார் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விஜயபுரா மாவட்டத்துக்குள்பட்ட வெளிவட்டச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலமேலுநகரிலிருந்து விஜயபுராவுக்குச் சென்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 60 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எபிஎம்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.