பெங்களூரு

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி பயத்தில் உள்ளார்: குமாரசாமி

DIN

சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தோல்வி பயத்தில் உள்ளார் என்று மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
முதல்வர் சித்தராமையா போட்டியிட உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் வாக்காளர்கள் மஜத வேட்பாளர் ஜி.டி.தேவெகெளடாவுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் சித்தராமையா பங்கேற்கும் கூட்டங்களுக்கு வருவதை அவர்கள் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக சித்தராமையா கலக்கமடைந்து தோல்வி பயத்தில் உள்ளார். அவர் அரசியலில் நுழைந்த ஆரம்ப காலத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்த தொகுதியை மறந்து வேறு தொகுதிக்குச் சென்றுவிட்டார். 
தற்போது மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் அவருக்கு தக்கப் பாடத்தை கற்பிக்க முடிவு செய்துள்ளனர். 
மஜதவிலிருந்து விலகி சென்ற 7 எம்எல்ஏக்களுக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. மஜதவை பிளக்க முதல்வர் சித்தராமையா மேற்கொண்ட முயற்சியை மக்கள் விரும்பவில்லை. சென்னப்பட்டனா தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தரும் வகையில், அங்கு பிரபலம் இல்லாத வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 
சென்னப்பட்டனா தொகுதியை பொருத்தவரை முதல்வர் சித்தராமையாவே போட்டியிட்டாலும், மஜத வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT