சிறுமி பலாத்காரம்: 10 ஆண்டு சிறைத் தண்டனை
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகபுரா வட்டம், கரடிகுட்டாவைச் சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் கடந்த 2017, மார்ச் 10-ஆம் தேதி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆனந்தைக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம், ஆனந்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.