முகப்பு
பெங்களூரு

காதுகேளாதோர், வாய்பேசாதோர்  பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:27 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள்,  முதியோர்நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் 2018-19-ஆம் ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மாணவர்சேர்க்கை இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவர்களை சேர்க்கவிரும்புவோர்  பள்ளியில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். 
கூடுதல் விவரங்களுக்கு  "32, பழைய பின்னமங்களா, முதல் கட்டம், இந்திராநகர், பெங்களூரு-560038' என்ற முகவரியில் இயங்கும் பள்ளியிலோ அல்லது 9449593830, 9019728336 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.