கடந்த 3 தேர்தல்களில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதம்
கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாவட்ட வாரியாக வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாவட்ட வாரியாக வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, தற்போது அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த தேர்தல் ஆணையம், மொத்தத்தில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறியிருந்தது. இந்நிலையில், அஞ்சல் வழியே அனுப்பப்பட்ட வாக்குகளையும் சேர்த்தால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்தமாக 72.36 சதவீத் வாக்குகள் தற்போது பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஆண்கள் 73.24 சதவீதமும், பெண்கள் 71.08 சதவீதமும் வாக்களித்துள்ளனர். பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதவிர, 2008, 2013, 2018-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.