பெங்களூரு

வெளிநாட்டு சிகரெட் விற்றதாக 3 பேர் கைது

DIN

விதிமுறைகளை மீறி வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு சிகரெட்டுகளை சிலர் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மல்லேஸ்வரம் எம்.டி.பிளாக்கை சேர்ந்த அம்ஜத் பாஷா (34), யஸ்வந்தபுரம் சதீஷ்குமார் (41), மைசூரு மொஹல்லாவைச் சேர்ந்த ஜெயந்திலால் (36) ஆகியோரைக் கைது செய்தனர். 
அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT