பெங்களூரு

வெள்ள நிவாரணம்: சுங்க வரி விலக்கு தேவை

DIN

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் வரி வசூலிப்பதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கெளடா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து, 17 மாவட்டங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட கர்நாடகத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது. வட கர்நாடகத்துக்கு செல்லும் வழியில் 20 முதல் 30 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு வரி வசூலிப்பதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

SCROLL FOR NEXT