பெங்களூரு

போலி ஒலிப்பதிவு துணுக்கை தயாரித்தாக முதல்வர் குமாரசாமி மீது புகார்

DIN

போலி ஒலிப்பதிவு துணுக்கை தயாரித்தாக முதல்வர் குமாரசாமி மீது  விதான செளதா காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
அண்மையில் முதல்வர் குமாரசாமி மஜத எம்.எல்.ஏ நாகனகெளடாவின் மகன் சரண்கெளடாவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து, நாகன கெளடாவை ஆபரேஷன் கமலா திட்டத்தில் பாஜகவிற்கு இழுக்க சரண்கெளடாவுடன், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக தெரிவித்து, தொலைபேசி உரையாடல் அடங்கிய துணுக்கை வெளியிட்டார்.
பாஜகவின் புகழை சீர்குலைக்கும் வகையில், வேண்டுமென்றே போலியான ஒலிப்பதிவு துணுக்கை முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளதாகக் கூறி, விதான செளதா காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர். புகாரைப் பதிந்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT