பெங்களூரு

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேர் கைது

DIN

சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீஸார்,  ரூ. 5 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு சஹகாரநகர் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.  இதனையடுத்து,  அங்கு சென்ற போலீஸார்,  சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்துரு (65),  சாந்தகுமார் (46), ராஜுரெட்டி (54), பாஸ்கர் (59), ரமேஷ் (45), மஞ்சுநாத் (40), ஸ்ரீகாந்த் (38), வேணுகோபால் (40), ரவிகுமார் (45), விக்னேஷ் (35), நாராயணசாமி (46), சந்திரசேகர் (42), சந்தீப் (40), சந்திரப்பா (40), ஹம்பனா (53), ரமேஷ் (59), சங்கர் (52), சிவபிரசாத் (45) ஆகியோரை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து கொடிகேஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி?

குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர்? அமலாக்கத் துறை தகவல்

மே.21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

அட! நம்ம இனியாவா!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராய் லட்சுமி!

SCROLL FOR NEXT