பைக் மீது தனியார் பேருந்து மோதல்: ஜவுளி வியாபாரி சாவு
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், இந்துப்பூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (60). இவர் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் பாண்டி என்பவருடன் பாக்கியை வசூல் செய்ய கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கெளரிபித்தனூர் மேல்யா கிராமத்துக்குச் சென்று விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். மேல்யா-கேதரே ஏரிக்கரைச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த திருமூர்த்தி உயிரிழந்தார். காயமடைந்த பாண்டி, பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.