பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலை மற்றும் மேம்பாலத்துக்கு சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலைக்கும், யஸ்வந்தபுரத்திலிருந்து கன்வா மெட்டல் தொழில்சாலை வரை உள்ள மேம்பாலத்துக்கும் மறைந்த சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடைபெறும் மாதாந்திரக் கூட்டத்தில் மேயர் கங்காம்பிகே இதை முன்மொழிய உள்ளார். மேலும் சிவக்குமார சுவாமிகள் ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, தங்குவசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கியதை வலியுறுத்து விதமாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பெங்களூரு மாநகராட்சி அறிவிக்க உள்ளது.