சிக்பேட்டை போக்குவரத்து போக்குவரத்து காவல் நிலையத்தில் ஜூன் 27-ஆம் தேதி இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு சிக்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் ஜூன் 27-ஆம் தேதி நண்பகல் 12 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-22942664 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.