பெங்களூரு

கொலை வழக்கில்  3 பேர் கைது

DIN

ராம்நகர் ஊரக காவல் சரகத்தில் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 
ராம்நகர் மாவட்டம், யாரேஹள்ளியைச் சேர்ந்தவர் புட்டராஜ் (45). இவரை புதன்கிழமை இரவு யாரோ தலை மீது கல்லைபோட்டு கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிந்த ராம்நகர் ஊரக போலீஸார், யாரேஹள்ளியைச் சேர்ந்த மனுகெளடா (32), முத்துராஜ் (35), ராம்நகரைச் சேர்ந்த பரத் (25) ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் புட்டராஜிடம் மனுகெளடா கடன் வாங்கியிருந்தாராம். கடனுக்கு அதிக அளவில் வட்டி வசூல் செய்து வ்ந்துள்ளார். 
இதனால் ஆத்திரமடைந்த மனுகெளடா, தனது கூட்டாளிகளுடன் இணைந்து புட்டராஜை கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும், போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT