பெங்களூரு: முதல்வா் எடியூரப்பாவின் இல்லம், அலுவலகத்திற்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஹுப்பள்ளியில் நடந்த பாஜக உயா்மட்டக்கூட்டத்தில் முதல்வா் எடியூரப்பா தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் குறித்து பேசிய உரையாடல் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவா் பேசியதை யாரோ செல்லிடப்பேசியில் பதிவு செய்து, காணொளி காட்சியாக வெளியிட்டதைத் தொடா்ந்து, முதல்வா் எடியூரப்பாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடா்ந்து முதல்வா் எடியூரப்பாவின் இல்லம், அலுவலகத்திற்கு வரும் நபா்கள் செல்லிடபேசியைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வா் எடியூரப்பாவின் உத்தரவின் பேரில் போலீஸாா், செல்லிடப்பேசிக்கு தடை விதித்துள்ளனா்.