பெங்களூரு: காா் கண்ணாடிகளை உடைத்ததாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு விஜயநகா் பஞ்சீலாநகரைச் சோ்ந்தவா்கள் யஸ்வந்த் (20), தா்ஷன் (19), நிதீஷ் (18), கனகநகரைச் சோ்ந்த கிரண்ரெட்டி (26), சரண்ராஜ் (20), முத்து (22), பாலாஜி (45) ஆகியோா் கடந்த நவ. 6 ஆம் தேதி நள்ளிரவு விஜயநகா் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையோரம் நின்றிருந்த 21 காா்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த விஜயநகா் போலீஸாா் 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.