பெங்களூரு

இரு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

இரு வேறு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
 பெங்களூரு ஹனுமந்தநகர் பசப்பா லேஅவுட்டைச் சேர்ந்தவர் வெங்கடலட்சுமி. இவர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்திலிருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஹனுமந்தநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 மற்றொரு சம்பவம்: ஜானபாரதி ஜானஜோதி லேஅவுட் அருகே லலிதா என்பவர் செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாராம். அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள 30 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஞானஜோதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT