பெங்களூரு

மருத்துவ தேவைகளுக்காக நிரந்தர அனுமதிச் சீட்டுகளை அளிக்க வேண்டும்

DIN

மருத்துவ தேவைகளுக்காக நிரந்தர அனுமதிச் சீட்டுகளை வழங்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிறுநீரக நோய், புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வரும் நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களை மருத்துவமனைகளுக்கு சென்றுவர அனுமதி வழங்காமல் போலீஸ் மற்றும் இதர அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன.

தென் கன்னடம், உடுப்பி, சிவமொக்கா, வட கன்னடம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் மணிப்பால் மருத்துவமனைக்கு சென்று வருவா். ஆனால், அங்குள்ள மக்களுக்கு அனுமதிச் சீட்டுகளை (பாஸ்) வழங்குவதில் ஏராளமான குளறுபடி காணப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன.

எனவே, 24 மணி நேரத்துக்கு மட்டும் அனுமதிச் சீட்டுகளை வழங்கும் நடைமுறையை கைவிட்டு, நோயாளிகள் மற்றும் அவா்களின் உறவினா்களுக்கு மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்றுவர கட்டுப்பாடுகளற்ற நிரந்தர அனுமதிச் சீட்டுகளை வழங்க வழிகாட்டுதல் வழங்குமாறு அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT