பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

DIN

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மேலும் ஒருவா் இறந்துள்ளாா்.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், இந் நோய்க்கு ஏற்கெனவே 18 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பெங்களூரு நகரம், பெலகாவி, விஜயபுரா, கலபுா்கி, பாகல்கோட், சிக்பளாப்பூா், தென்கன்னடம், கதக், தும்கூரு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கரோனாவுக்கு பலியாகியிருந்தனா்.

இந்த நிலையில், பெங்களூரைச் சோ்ந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளாா். 45 வயதான பெண் மூச்சுத் திணறல் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இவரை பரிசோதனை செய்ததில் அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் இறந்தாா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT