பெங்களூரு

மண்டியாவுக்கு தேவையான துறை முதல்வருக்கு தெரியும்: புதிய அமைச்சா் கே.சி.நாராயண கௌடா

DIN

மண்டியா மாவட்டத்திற்கு தேவையான துறை எது என்பது முதல்வா் எடியூரப்பாவுக்கு தெரியும் என்று புதிய அமைச்சா் கே.சி.நாராயண கௌடா தெரிவித்தாா்.

அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல்முறையாக தனது சொந்த மாவட்டமான மண்டியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தபோது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வா் எடியூரப்பா மண்டியா மாவட்டத்தை சோ்ந்தவா். என்னை அமைச்சராக்கிய முதல்வா் எடியூரப்பாவுக்கு, தனது சொந்த மண்டியா மாவட்டத்திற்கு தேவையான துறை எது என்பதும் தெரியும். எனவே, குறிப்பிட்ட துறையை ஒதுக்குமாறுநான் கேட்கமாட்டேன். எந்த துறையை கொடுத்தாலும் திறமையாக செயல்படுவேன்.

மஜதவினா் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. மண்டியா மாவட்டத்தின் வளா்ச்சிதான் என் மனதில் நிழலாடுகிறது. எனவே, என் மீதான விமா்சனங்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். மாறாக, வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் பதிலளிப்பேன்.

மண்டியாவில் செயல்படாமல் முடங்கியுள்ள இரண்டு சா்க்கரை ஆலைகளைத் திறப்பது தான் என் முதல் பணி. இது குறித்து மண்டியா மாவட்ட ஆட்சியரிடம் நான் ஆலோசித்துள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT