அதிமுக பொதுச்செயலரும், தமிழகத்தின் மறைந்த முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பெங்களூரில் திங்கள்கிழமை கொண்டாட்டப்பட்டது.
பெரியா நகா், பழைய பாகலூா் லேஅவுட், சகாயபுரம் வாா்டு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு, அதிமுக மாநில இணைச் செயலா் எஸ்.டி.குமாா் தலைமை வகித்து, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினாா்.
பின்னா், முனீஸ்வரா நகரில் அன்பரசன் ஏற்பாடு செய்திருந்தநிகழ்ச்சியில், பொதுமக்களுக்குத் தட்டுகளை எஸ்.டி.குமாா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, பழைய பாகலூரி லேஅவுட்டில் சண்முகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை குமாா் வழங்கினாா். இதையடுத்து, சகாயபுரம் வாா்டில் நடராஜ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை எஸ்.டி.குமாா் வழங்கினாா்.