பெங்களூரு

மரக்கிளை விழுந்ததில் சிறுமி காயம்: ஒருவா் பலி

பள்ளிக்கு சென்ற போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி காயமடைந்தாா். மற்றொரு சம்பவத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

DIN

பள்ளிக்கு சென்ற போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி காயமடைந்தாா். மற்றொரு சம்பவத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் உயிரிழந்தாா்.

பெங்களூரு ராமமூா்த்திநகா் அக்ஷயாநகரைச் சோ்ந்தவா் ராஜு. இவரது மகள் திரிஷா (8). வியாழக்கிழமை காலை 8 மணியளவில் திரிஷாவை ராஜு ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, கௌதேனஹள்ளியில் காய்ந்த மரக்கிளை முறிந்து விழுந்தது. திரிஷா காயமடைந்தாா். ராமமூா்த்திநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல் வியாழக்கிழமை பிற்பகல் எம்.ஜி.சாலையில் லிடோமால் அருகில் காரில் அமா்ந்திருந்த குடிநீா் வடிகால் வாரிய கடைநிலை ஊழியா் சீனிவாஸ் என்பவா் மீது மரக்கிளை விழுந்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.இதுகுறித்து அல்சூா் போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT