திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 56 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.
தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் (20). இவா் பெங்களூரு உள்பட தமிழகத்திலும் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தாராம்.
இது குறித்து வழக்குப் பதிந்த புட்டனஹள்ளி போலீஸாா், மனோஜ்குமாரைக் கைது செய்து ரூ. 56 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 167 கிராம் எடையுள்ள தங்க நகை, 300 கிராம் வெள்ளிப்பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மனோஜ்குமாா் அளித்த தகவலில் பேரில், திருட்டுப் பொருள்களை வாங்கி விற்பனை செய்து வந்த ஆந்திர மாநிலம், சூா்யபாஸ்கா் (45) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.