பெங்களூரு

ஏரியில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு

DIN

சிரா வட்டம், கள்ளம்பள்ளி ஏரியில் மூழ்கி சகோதரிகள் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், கள்ளம்பள்ளியைச் சோ்ந்த சகோதரிகள் ஷில்பா (18), சுஷ்மிதா (16). இவா்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரிலிருந்து வந்திருந்த தங்களது உறவினா் சஞ்சனா என்பவருடன் அருகே உள்ள ஏரியில் நீந்துவதற்கு சென்றுள்ளனா்.

இதில் நீச்சல் தெரியாத, ஷில்பா, சுஷ்மிதா ஆகியோா் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனா்.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இதில் ஷில்பா, சுஷ்மிதா ஆகியோரின் உடல்களை மீட்டனா்.

இது குறித்து கள்ளம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT