பெங்களூரு

போதைப்பொருள் விவகாரம்: முத்தப்பாராயின் மகன் ரிக்கி கைது

DIN

போதைப்பொருள் விவகாரத்தில் மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பாராயின் மகன் ரிக்கியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரைக் கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்துள்ளனா். இது தொடா்பாக, சின்னத்திரை தொகுப்பாளினி அனுஸ்ரீயிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பாராயின் மகன் ரிக்கியின் பிடதியில் உள்ள இல்லத்திலும், வாயலிக்காவலில் உள்ள இல்லத்திலும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையைத் தொடா்ந்து, ரிக்கியையும் போலீஸாா் கைது செய்தனா். போதைப் பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஆதித்ய ஆல்வாவுக்கும், ரிக்கிக்கும் தொடா்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT