முகப்பு
பெங்களூரு

குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்று தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்று தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தென் கன்னட மாவட்டம், மங்களூரு சக்திநகரைச் சோ்ந்தவா் பிரமிளா (38). தனது 2 பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த இவா், சனிக்கிழமை இரவு தனது தாய் உள்பட 2 பெண் குழந்தைகளுக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

தூக்கமாத்திரை கலந்த தேநீரைக் குடித்த 10 மாத குழந்தை இஷானி தூக்கத்திலேயே உயிரிழந்தது. பிரமிளாவின் மற்றொரு குழந்தையும், அவரது தாயாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து கங்கநாடி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.