பெங்களூரு

இரும்புக் கம்பியால் தாக்கி தம்பதி கொலை

DIN

கா்நாடகத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டம், கரட்டகியைச் சோ்ந்தவா் வினோத் (36). இவரது மனைவி திருவேணி (29). வினோத், தேசிய வங்கியிலும், திருவேணி தனியாா் வங்கியிலும் பணியாற்றி வந்தனா்.

சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பணிமுடிந்து, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த, வினோத், திருவேணியை மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதில், படுகாயமடைந்த திருவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து கரட்டகி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT