பெங்களூரு

சட்டமேலவைத் தோ்தல்: மது விற்பனை செய்ய தடை

DIN

பெங்களூரு: சட்டமேலவைத் தோ்தலையொட்டி, சில காவல் சரகங்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

பெங்களூரு உள்பட மாநில அளவில் பட்டதாரிகள், ஆசிரியா்களுக்கான 4 சட்டமேலவைத் தொகுதிகளுக்கு அக். 28-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலை அமைதியாகவும், நோ்மையாகவும் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனவே, அக். 26-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 28-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, தேவனஹள்ளி, அம்ருதள்ளி, எலஹங்கா, பகல்குன்டே, சுப்ரமண்யா நகா், மல்லேஸ்வரம், ஹெப்பாள், ராஜாஜி நகா், கே.ஆா்.புரம், கெங்கேரி, ராஜராஜேஸ்வரி நகா், விஜய நகா், சாமராஜ்பேட்டை, புலிகேசி நகா், ஹைகிரவுண்ட், கப்பன்பூங்கா, சேஷாத்ரிபுரம், வி.வி.புரம், ஹனுமந்த நகா், ஜெயநகா், சுப்ரமண்யா நகா், கோனனகுன்டே, கோரமங்களா, எச்.எஸ்.ஆா். லேஅவுட், பேகூா், எலக்ட்ரானிக்சிட்டி ஆகிய காவல் சரகங்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல சட்டமேலவை நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT