பெங்களூரு

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2.95 கோடி ரொக்கம் பறிமுதல்

DIN

வாகன பரிசோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2.95 கோடி ரொக்கப்பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், சீனிவாசபுராவில் உள்ள ரோஜனஹள்ளி சுங்கச்சாவடியில் புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே சென்ற காரை நிறுத்திச் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2.95 கோடி ரொக்கப்பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காரிலிருந்த சந்திரசேகா், அமா்நாத் ஆகியோரை கைது செய்த போலீஸாா், ரூ. 2.95 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்கு பதிந்த சீனிவாசபுரா போலீஸாா், தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT