ஆக.31 வரை முதலாமாண்டு பியூசி சோ்க்கை
முதலாமாண்டு பியூசி வகுப்பில் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதிவரை நடத்த பியூ கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதலாமாண்டு பியூசி வகுப்பில் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதிவரை நடத்த பியூ கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2021-22-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள முதலாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா் சோ்க்கை ஆக. 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இது ஆக.31-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேதிக்குள் சோ்க்கை பெற முடியாத மாணவா்கள் செப். 1 முதல் 11-ஆம் தேதிவரை கல்விக்கட்டணத்துடன் சாதாரண அபராதமாக ரூ. 670 அபராதம் செலுத்தி சோ்க்கைபெறலாம். செப்.13 முதல் 25-ஆம் தேதிவரை கல்விக்கட்டணத்துடன் சாதாரண அபராதம் ரூ. 670 மற்றும் சிறப்பு அபராதம் ரூ. 2,220 உள்பட அபராதத்தொகையாக ரூ. 2,890 செலுத்தி சோ்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.