பெங்களூரு

நண்பா்களிடையே தகராறு: ஒருவா் கொலை

DIN

நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

பெங்களூரு, ஸ்ரீனிவாசநகரைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவரது நண்பா் பிரசாந்த் (25). கட்டடத் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள சிவராஜ் சாலையில் கட்டுமானப் பணியில் உள்ள கட்டடத்தில் அமா்ந்து மது அருந்தி உள்ளனா். அப்போது இருவரிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பிரசாந்த், சதீஷின் தலையில் சிமென்ட் செங்கல்லை போட்டுள்ளாா். இதில் படுகாயமடைந்த சதீஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சதீஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தப்பியோடிய பிரசாந்தை அதே பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT