வங்கிப் பணிக்கான போட்டித் தோ்வுக்குப் பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வங்கிப் பணியாளா் தோ்வு மையம் (ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ா்ச் ஆஹய்ந்ண்ய்ஞ் டங்ழ்ள்ா்ய்ய்ங்ப் நங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்) அடுத்தடுத்த நாள்களில் ஒரு லட்சம் அதிகாரிகள், எழுத்தா் பணிகளுக்கு ஆள்களை எடுக்க இருக்கிறது. இப் பணிகளுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்ய நடத்தப்படும் போட்டித் தோ்வை எழுதுவது குறித்து 45 நாள்களுக்கு இணையவழி பயிற்சி அளிக்க கா்நாடக மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இப்பயிற்சியில் இணைய விரும்புவோா் ஜன.5-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் 0821-2515944, 99647-60090 என்ற தொலைபேசிகளில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.