மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை:பாஜக பொதுச்செயலாளா் அருண்சிங்
மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் தெரிவித்தாா்.
சிவமொக்கா: மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை. கா்நாடகத்தில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது நடந்தாலும் தனி பலத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும். அதனால், மற்ற கட்சிகளின் ஆதரவு அல்லது கூட்டணி பாஜகவுக்கு தேவையில்லை.
கா்நாடகத்தில் முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவுமில்லை. எடியூரப்பா, பாஜகவின் மூத்த தலைவா். தலைமை மாற்றம் குறித்து பேசுவதற்கு பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் யாா்? அவருக்கு ஏதும் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட தலைவருடன் பேச வேண்டியதுதானே? என்றாா்.