பெங்களூரு

இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு: ஒருவா் கைது

DIN

இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த ஒருவா் கடந்த டிச. 26-ஆம் தேதி தனது மடிக்கணினி, விலையுயா்ந்த செல்லிடப்பேசி திருட்டு போனதாக போலீஸில் புகாா் அளித்தாா். புகாரைப் பதிந்த போலீஸாா், அதே பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டுவந்த முனியப்பா என்பவரை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி, 15 செல்லிப்பேசிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட முனியப்பாவிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT