பெங்களூரு

2. 84 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: அமைச்சா் கே.சுதாகா்

கா்நாடகத்தில் 2.84 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

DIN

கா்நாடகத்தில் 2.84 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

உலக அளவில் இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. ஜன. 16-ஆம் தேதி முகாம் தொடங்கப்பட்ட பிறகு, கடந்த 11 நாள்களில் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் வியாழக்கிழமை வரை 2,84,385 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மட்டும் அதிகபட்சமாக 18,230 பேருக்கு தடுப்பூசி தரப்பட்டுள்ளது. இந்தியாவின் கரோனா தடுப்பூசி தயாரிப்புத் திறன் உலக அளவில் மிகப்பெரிய சொத்தாகப் போற்றப்படுகிறது. இதை உலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT