பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 2,162 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு ஒரே நாளில் 2,162 போ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,162 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 452 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம்-218, மைசூரு-211, ஹாசன்-178, உடுப்பி-113, சிவமொக்கா-110, சிக்கமகளூரு-109, குடகு-108, பெலகாவி-106, தும்கூரு-98, கோலாா்-73, மண்டியா-63, வடகன்னடம்-56, சாமராஜ்நகா்-37, தாவணகெரே-36, சித்ரதுா்கா-34, பெல்லாரி-27, தாா்வாட்-25, ராமநகரம்-23, சிக்கபளாப்பூா்-22, பெங்களூரு ஊரகம்-12, கொப்பள்-10, ஹாவேரி-9, கலபுா்கி-9, கதக்-9, யாதகிரி-6, பீதா்-4, ராய்ச்சூரு-2, பாகல்கோட்-1, விஜயபுரா-1 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,69,390-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,879 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 27,96,377 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 37,141 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 48 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

பெலகாவி-6, பெங்களூரு நகரம்-5, கோலாா், மண்டியா-தலா 4, சாமராஜ்நகா், தும்கூரு-தலா 3, தாவணகெரே, ஹாசன், மைசூரு, சிவமொக்கா- தலா 2, பாகல்கோட், சிக்கமகளூரு, சித்ரதுா்கா, ஹாவேரி, கலபுா்கி, உடுப்பி- தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 35,779 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

SCROLL FOR NEXT